2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் மேல்முறையீட்டு வழக்கு - ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் பதிலளிக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு
Aug 10 2018 5:45PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் மேல்முறையீட்டு வழக்கில் திமுகவின் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் பதிலளிக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாட்டிற்கு ஒரு லட்சத்து 75 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்திய 2ஜி ஸ்பெக்ட்ரம் மெகா ஊழல் வழக்கில், திமுகவைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி உள்ளிட்டோரை டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றம் விடுதலை செய்தது. இதனை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் சி.பி.ஐ. சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், திமுகவின் ஆ.ராசா, கனிமொழி ஆகியோர் இதுகுறித்து பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. அக்டோபர் மாதம் 9-ஆம் தேதி, இருவரும் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.