பாரதிய ஜனதா கட்சிய ஆளும் மாநிலங்களில் பெண்கள் அதிகளவில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றச்சாட்டு
Aug 11 2018 12:52PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ராஜீவ் பவன் திறப்பு விழாவில் பங்கேற்ற காங்கிரஸ் கட்சியின் தலைவர் திரு. ராகுல் காந்தி, அங்கே கூடியிருந்த தொண்டர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்களிடையே உரையாற்றினார். அப்போது, கடந்த 4 ஆண்டுகளில் பெண்களுக்கு எதிராக நடந்த குற்றங்கள் குறித்து விமர்சனம் செய்தார். உத்தரபிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில் பெண்கள் மீது நடத்தப்பட்ட பாலியல் வன்கொடுமை குற்றங்கள் தொடர்பாக பிரதமர் திரு. நரேந்திர மோடி ஒரு வார்த்தை கூட பேசவில்லை என குற்றம்சாட்டிய அவர், பா.ஜ.க ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் மட்டும் ஏன் பெண்கள் அதிக அளவில் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறார்கள்? என கேள்வி எழுப்பினார்.