காஷ்மீரின் மலைப்பகுதியில் நிலச்சரி : தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு
Aug 12 2018 5:55PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காஷ்மீரின் மலைப்பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவால் தேசிய நெடுஞ்சாலையில் பாறைகள் சரிந்து விழுந்து போக்குவரத்து தடைபட்டது.
காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் கேரி எனுமிடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவால் பாறைகளும் மண்ணும் ஜம்பு-ஸ்ரீநகர் தேசியநெடுஞ்சாலையில் சரிந்து விழுந்தன. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து தடைபட்டது. இதன் காரணமாக மெகேலுக்கு யாத்திரை சென்ற வாகனம் உட்பட 70-க்கும் மேற்பட்ட வாகனங்கள் பலமணிநேரம் சாலையிலேயே நின்றுகொண்டிருந்தன. இதையடுத்து சாலையிலிருந்த பெரிய பாறையை பலமணிநேரத்திற்கு பின்னர் தீயணைப்புத்துறையினர் அகற்றி போக்குவரத்தை சரிசெய்தனர்.