ஃபேஸ்புக்கிலிருந்து இந்தியர்களின் தகவல்கள் திருடப்பட்ட விவகாரம் - ஃபேஸ்புக் மற்றும் கேம்பிரிட்ஜ் அனாலிடிட்கா நிறுவனங்களுக்கு சி.பி.ஐ. கடிதம்
Sep 18 2018 5:11PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஃபேஸ்புக்கிலிருந்து இந்தியர்களின் தகவல்கள் திருடப்பட்ட விவகாரம் தொடர்பாக, ஃபேஸ்புக் மற்றும் கேம்பிரிட்ஜ் அனாலிடிட்கா நிறுவனங்களுக்கு சி.பி.ஐ. கடிதம் அனுப்பியுள்ளது.
இங்கிலாந்தை சேர்ந்த கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா நிறுவனம், ஃபேஸ்புக் நிறுவனத்தின் 5 கோடி வாடிக்கையாளர்களின் தகவல்களை திருடி, தவறாக பயன்படுத்தியது என குற்றச்சாட்டு எழுந்தது. இந்தியாவிலும் பல்வேறு அரசியல் கட்சிகளுக்காக பணியாற்றினோம் என கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா நிறுவனம் தெரிவித்ததுடன், ஃபேஸ்புக்கில் இருந்து எடுக்கப்பட்ட தகவல்கள், கடந்த மக்களவை தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்டதாக கூறியது. இதனை ஒப்புக்கொண்ட ஃபேஸ்புக் நிறுவனம், அதற்கு மன்னிப்பு கோரிய நிலையில், தகவல்களை இந்த நிறுவனங்கள் எவ்வாறு சேகரித்தன என்பது குறித்து விளக்கமளிக்க வலியுறுத்தி அந்நிறுவனங்களுக்கு சி.பி.ஐ. கடிதம் எழுதியுள்ளது.