தெலங்கானாவில் அரசுப் பணியாளர் தேர்வு : தாலியை கழற்றி கொடுத்துவிட்டு தேர்வெழுத சொன்ன அதிகாரிகள்
Sep 18 2018 5:22PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தெலங்கானாவில் நடைபெற்ற அரசுப் பணியாளர் தேர்வின்போது, பாதுகாப்பு கருதி, திருமணமான பெண்களின் தாலி கழற்றப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தெலங்கானா மாநிலத்தில், கிராம வருவாய் அதிகாரி பதவிக்கான தேர்வு நடைப்பெற்றது. இதில், நார்ச பூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் தேர்வெழுத வந்த திருமணமான பெண்களிடம், தாலியைக் கழற்றினால் மட்டுமே தேர்வெழுத அனுமதிப்போம் என அதிகாரிகள் கூறியதால் சலசலப்பு ஏற்பட்டது.
பெண்கள் எவ்வளவோ கெஞ்சி பார்த்தும், தேர்வாணையம் தெரிவித்துள்ள விதிமுறைகளின் படியே தாங்கள் செயல்படுவதாக அதிகாரிகள் கூறினர். பின்னர், பெண்கள் தங்களின் தாலியைக் கழற்றிவிட்டே தேர்வு எழுதினர்.
பெண்கள், தங்களின் தாலியில் எலெக்ட்ரானிக் டிவைஸ் ஏதேனும் வைத்து தேர்வு எழுதி முறைகேட்டில் ஈடுபட வாய்ப்புள்ளதால்தான் அனுமதிக்கவில்லை என அதிகாரிகள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.