அஃப்கனிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி, பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு
Sep 19 2018 5:43PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தியா வந்துள்ள அஃப்கனிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார்.
அஃப்கனிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி, ஒருநாள் சுற்றுப்பயணமாக இந்தியா வருகை தந்துள்ளார். இன்று காலை டெல்லிக்கு வந்த அஷ்ரப் கானிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியை அஷ்ரப் கானி சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பின் போது, இரு தரப்பு உறவுகள் மற்றும் பிராந்திய ஒத்துழைப்பு, தாலிபான்களுடனான சமரச உடன்படிக்கை உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் விவாதித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அஃப்கனிஸ்தானில் விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதிபர் அஷ்ரப் கானியின் இந்தியப்பயணம் அமைந்துள்ளது.