திருத்தங்களுடன் முத்தலாக் தடுப்பு அவசர சட்டம் - மத்திய அமைச்சரவையில் ஒப்புதல்
Sep 19 2018 6:11PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
முத்தலாக் அவசர தடுப்பு சட்டத்தில் 3 திருத்தங்கள் செய்யப்பட்டு மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமியர்கள் இடையே முத்தலாக் மூலம் விவாகரத்து பெறும் நடைமுறையை தடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. முத்தலாக் தடுப்பு மசோதாவை, மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். 'முத்தலாக்' முறைக்கு தடை விதிக்கும் 'முஸ்லிம் பெண்கள் திருமண உரிமை பாதுகாப்பு சட்ட மசோதா' மக்களவையில் நிறைவேறியது. மாநிலங்களவையில் நிலுவையில் உள்ளது.
இதில், 3 திருத்தங்கள் செய்யப்பட்டு அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. முத்தலாக் வழங்கிய பின் கணவன், மனைவி இடையே சமரசம் ஏற்பட்டால் அபராதம் செலுத்தி மீண்டும் சேரலாம் என்றும், முத்தலாக்கில் கணவன், மனைவியின் குடும்பத்தினர் மட்டுமே புகார் அளிக்கலாம் உள்ளிட்ட மூன்று திருத்தங்கள் கொண்டு வரப்படுகின்றன.