மத்திய அரசு அதிரடியாக கொண்டுவந்துள்ள முத்தலாக் தடுப்பு அவசர சட்டம் - குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல்
Sep 20 2018 4:13PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
முத்தலாக் தடுப்பு அவசர சட்டத்துக்கு குடியரசு தலைவர் திரு. ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.
முத்தலாக் மூலம் விவாகரத்து பெறும் நடைமுறையை தடுக்கும் சட்ட மசோதாவை, மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். 'முத்தலாக்' முறைக்கு தடை விதிக்கும் இந்த 'முஸ்லிம் பெண்கள் திருமண உரிமை பாதுகாப்பு சட்ட மசோதா' மக்களவையில் நிறைவேறியது. இந்த சட்டம் மாநிலங்களவையில் இன்னும் நிலுவையில் உள்ளது. இதனிடையே, 3 திருத்தங்கள் செய்யப்பட்டு இந்த சட்டத்தை அவசர சட்டமாக கொண்டுவர அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. முத்தலாக் அறிவித்தபின் பின் கணவன் ஜாமீன் பெறவும், மனைவியின் குடும்பத்தினர் மட்டுமே புகார் அளிக்கலாம் என்பது உள்ளிட்ட மூன்று திருத்தங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு அவசர சட்டமாக கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த அவசர சட்டத்துக்கு குடியரசு தலைவர் திரு. ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். இதனை அடுத்து அவசர சட்டம் அமலுக்கு வந்துள்ளது. உச்சநீதிமன்றம் முத்தலாக் முறையை ரத்து செய்துவிட்ட நிலையிலும்,இந்த நடைமுறைக்கு எதிராக சட்ட மசோதா மக்களவையில் நிறைவேறியுள்ள நிலையிலும் நாட்டில் முத்தலாக் புகார்கள் அதிகரித்து வருவதால் அவசர சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.