பாலியல் சர்ச்சையில் சிக்கிய பிஷப் ஃபிராங்கோ பொறுப்பில் இருந்து நீக்கம் - வாடிகன் உத்தரவு
Sep 20 2018 6:08PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பாலியல் புகாரில் சிக்கிய கேரளாவைச் சேர்ந்த பிராங்கோவை ஜலந்தர் பிஷப் பொறுப்பில் இருந்து நீக்கி வாடிகன் உத்தரவிட்டுள்ளது.
பஞ்சாப் மாநிலம் ஜலந்தரை சேர்ந்த கத்தோலிக்க பேராயர் ஃபிரான்கோ மூலக்கல் மீது கேரள கன்னியாஸ்திரி பாலியல் புகார் அளித்திருந்தார். இதனைத் தொடர்ந்து அவரிடம் கொச்சியில் உள்ள குற்றப்பிரிவு அலுவலகத்தில் விசாரணை நடைபெற்றது. வைக்கம் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் K.சுபாஷ் தலைமையில் 5 பேர் கொண்ட குழு, இரண்டாம் நாளாகஇன்றும் விசாரணை நடத்தினர். இதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்படலாம் என்று தகவல் வெளியாகியது. இந்நிலையில், பிராங்கோவை ஜலந்தர் பிஷப் பொறுப்பில் இருந்து நீக்கி வாடிகன் நடவடிக்கை எடுத்துள்ளது.