உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்திய மாநில அரசுக்கு எதிர்ப்பு - கேரளாவில் முழு அடைப்பு போராட்டம் - அசம்பாவிதங்களை தவிர்க்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடு
Oct 18 2018 12:54PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சபரிமலையில் பெண்கள் வழிபாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டத்தில் போலீஸ் தாக்குதலை கண்டிக்கும் வகையில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்தது. இதற்கு எதிராக கேரளாவில், நாள்தோறும் போராட்டங்களும், கண்டன பேரணிகளும் நடத்தப்பட்டு வருகின்றன.
ஐப்பசி மாத பூஜைக்காக கோயில் நடை நேற்று திறக்கப்பட்டது. உச்சநீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு முதன்முறையாக நடை திறக்கப்பட்டதால், ஏராளமான பெண் பக்தர்கள் சபரிமலையில் குவிந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட இந்து அமைப்புகளும், காங்கிரஸ் கட்சியும் பெண் பக்தர்களை தடுத்து நிறுத்தி வன்முறையில் ஈடுபட்டனர். காவல்துறை வாகனங்கள் மற்றும் பேருந்துகள் மீதும் கல்வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால், பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் பெண் பக்தர்களும், தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.
ஐயப்பனை தரிசிக்க வரும் பெண்களை, சபரிமலையின் அடிவாரமான நிலக்கல் பகுதியிலேயே, இந்து அமைப்புகள் தடுத்து நிறுத்தியதால், பதற்றம் அதிகரித்தது. இதை கருத்தில் கொண்டு அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன் காரணமாக சபரிமலை, பம்பை, நிலக்கல் போன்ற இடங்களில் பதற்றமான சூழல் இருந்துவரும் நிலையில், போலீஸ் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் இன்று முழு அடைப்பு நடைபெறுகிறது.
அந்தராஷ்டிரிய இந்து பரிஷத் மற்றும் சபரிமலை சம்ரக்ஷணா சமிதி உள்ளிட்ட இந்து அமைப்புகள் இந்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. இதனால், கேகரள மாநிலம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இப்போராட்டத்தால், அங்கு பேருந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.