பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா -அக்பர் ராஜினாமா செய்தது மீ டூ இயக்கத்துக்கும், உண்மைக்கும் கிடைத்த வெற்றி என எதிர்க்கட்சிகள் கருத்து
Oct 18 2018 12:30PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர், தனது பதவியை ராஜினாமா செய்தது, மீ டூ இயக்கத்துக்கும், உண்மைக்கும் கிடைத்த வெற்றி என எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன.
பெண் பத்திரிக்கையாளர்கள் தெரிவித்த பாலியல் புகார்களை தொடர்ந்து எழுந்த நெருக்கடியால் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் திரு. அக்பர் ராஜினமா செய்தார். அவருடைய ராஜினாமாவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்றுக் கொண்டார்.
பாலியல் புகார்கள் குறித்து நடவடிக்கை எடுக்க ராஜ்நாத்சிங் தலைமையிலான அமைச்சரவை குழு ஒன்றை மத்திய அரசு அமைத்துள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள், எம்.ஜே.அக்பர் மீதான குற்றச்சாட்டு தொடர்பாக பிரதமர் மோடி தொடர்ந்து மௌனம் காத்து வருவது ஏன்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
எம்.ஜே.அக்பர் ராஜினாமா செய்துள்ளது மீ டூ இயக்கத்துக்கு கிடைத்த வெற்றி என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தெரிவித்துள்ளன.