பணியிடங்கள் மட்டுமல்லாமல் அனைத்து இடங்களிலும் பெண்களின் சம உரிமை பாதுகாக்கப்படும் - மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவ்டேகர் உறுதி
Oct 18 2018 5:55PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பணியிடங்கள் மட்டுமல்லாமல் அனைத்து இடங்களிலும் பெண்களின் சம உரிமை பாதுகாக்கப்படும் என மத்திய அமைச்சர் திரு.பிரகாஷ் ஜாவ்டேகர் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெண்கள் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பதே அரசின் கொள்கை என குறிப்பிட்டார். எம்.ஜே.அக்பர் விவகாரம் பற்றி கருத்து தெரிவித்த திரு.ஜாவ்டேகர், பணியிடங்களில் உள்ள பெண்கள் மட்டுமின்றி, சமூகத்தில் உள்ள அனைத்து பெண்களும் சமமாக மதிக்கப்பட்டு, அவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என தெரிவித்தார்.