பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தால் மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை - இந்தியா மீண்டும் திட்டவட்டம்
Oct 19 2018 10:08AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்திய மண்ணிலிருந்து இயக்கப்படும் தீவிரவாத குழுக்கள் மீது பாகிஸ்தான் உறுதியான நடவடிக்கையை எடுத்தால் மட்டுமே அந்நாட்டுடன் சுமூக பேச்சுவார்த்தை நடத்த முடியும் என மத்திய அரசு மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் திரு. ரவீஷ் குமார், H1B விசா தொடர்பான பிரச்சனைகளை அமெரிக்காவின் கவனத்திற்கு கொண்டு சென்றிருப்பதாகவும், ஈரானுக்கு, அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடையினால் இந்தியாவுக்கு எந்த பாதிப்பும் வராது என்றும் கூறினார்.
பாகிஸ்தான் விவகாரத்தை பொறுத்தவரை, தீவிரவாத செயல்கள் நிறுத்தப்படாத வரை பேச்சுவார்த்தையில் அர்த்தமில்லை என்பதில் இந்தியா தெளிவாக உள்ளதாகக் கூறினார். இந்திய மண்ணில் இருந்து இயக்கப்படும் தீவிரவாத குழுக்கள் மீது உறுதியான நடவடிக்கையை பாகிஸ்தான் எடுத்தால் மட்டுமே சுமூக பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.