சபரிமலைக்குள் பெண்களை அனுமதிப்பது குறித்த விவகாரத்தில் தேவசம்போர்டு முடிவு எடுக்க கேரள அரசு அனுமதி : சீராய்வு மனு தாக்‍கல் செய்வது குறித்து தேவசம்போர்டு இன்று முடிவு

Oct 19 2018 10:16AM
எழுத்தின் அளவு: அ + அ -

சபரிமலைக்குள் பெண்களை அனுமதிப்பது குறித்த விவகாரத்தில் தேவசம்போர்டு எந்த முடிவும் எடுக்க கேரள அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், சீராய்வு மனு தாக்‍கல் செய்வது குறித்து இன்று முடிவு எடுக்‍கப்படும் என தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.

சபரிமலை கோயிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பலரும் ஆதரவும், இந்து அமைப்பினர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். அண்மையில் சபரிமலையில் நடை திறக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த விவகாரம் விஸ்வரூபமானது. கோயிலுக்குள் செல்ல முயன்ற பெண்களை தடுத்து போராட்டக்காரர்கள் திருப்பி அனுப்பினர். பெண் காவலர்கள் பணியாற்றவும் போராட்டக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

சபரிமலை விவகாரத்தில், சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டால் போராட்டத்தை கைவிட தயாரா என தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார் தெரிவித்தார். சபரிமலை விவகாரத்தில் சமரசத்துக்கு தேவசம் போர்டு தயாராக இருப்பதாகவும், சீராய்வு மனு தாக்கல் செய்வது குறித்து இன்று முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார். சபரிமலை விவகாரத்தில் எந்த முடிவும் எடுக்கலாம் என தேவசம்போர்டுக்கு கேரள அரசு முழு அனுமதி அளித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00