சபரிமலை விவகாரத்தில் கேரள காவல்துறை தவறு இழைத்துவிட்டது - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசு மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு
Oct 19 2018 1:41PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சபரிமலை விவகாரத்தில் கேரள காவல்துறையினர் சரியான முறையில் செயல்படவில்லை என அம்மாநில காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அம்மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர், திரு. ரமேஷ் சென்னிதலா, சபரிமலை பிரச்சனையை கையாளுவதில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசு சரியான முறையில் செயல்படவில்லை என குற்றம் சாட்டினார். குறிப்பாக, கேரள காவல்துறை தொடர்ந்து தவறு செய்து வருவதாக விமர்சித்தார். சபரிமலை சென்ற பெண் பக்தருக்கு போலீஸ் உடையை அணிவித்தது தவறு என்றும் குறை கூறினார். தங்கள் அரசு ஆட்சியில் இருந்திருத்தால் இந்த பிரச்சனையை சரியான முறையில் கையாண்டிருப்போம் என்றும், சபரிமலையில் வன்முறை நிகழ்ந்திருக்காது என்றும் கூறினார். தற்போதைய நிலவரம் குறித்து தாங்கள் ஆளுநரை சந்தித்து பேசியிருப்பதாகவும் திரு.சென்னிதலா தெரிவித்தார்.