பஞ்சாப் ரயில் விபத்து சம்பவ பகுதியில் ரயில்வேதுறை உயரதிகாரிகள் நேரில் ஆய்வு - அம்ரிட்சர் பாதையில் 8 ரயில்கள் ரத்து
Oct 20 2018 3:21PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பஞ்சாப் மாநிலத்தில் ரயில் விபத்து நிகழ்ந்த இடத்தை ரயில்வேதுறை உயரதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு நடத்தினர்.
அம்ரிட்சரில் ஆளில்லா ரயில்வே கிராசிங்கிற்கு வெகு அருகே தசரா கொண்டாட்டம் நடத்தப்பட்டதும், அங்கு ரயில்வே போலீசார் யாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்கான எந்த திட்டமும் விழா ஒருங்கிணைப்பாளர்களிடம் இல்லாததும், ரயில்வே கிராசிங்கை ஒட்டி தடுப்புகளோ வேலியோ அமைக்கப்படாததும் விபத்துக்கு காரணம் என்று தகவல்கள் வெளியாகிவுள்ளன. 60க்கும் மேற்பட்டோரை பலிகொண்ட இந்த விபத்து குறித்து பஞ்சாப் அரசு விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது. ரயில்வேதுறை அதிகாரிகளும் இதுகுறித்த விசாரணையை தொடங்கியுள்ளனர்.
விபத்து நிகழ்ந்த இடத்தை, ரயில்வே வாரிய தலைவர் திரு. அஸ்வினி லோகானி மற்றும் பிற நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.