டெல்லியில் நடைபெற்ற ராம்லீலாவில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, ராவணன் உருவபொம்மையை அம்பெய்து எரித்து நிகழ்ச்சியை தொடங்கிவைத்தார்

Oct 20 2018 12:29PM
எழுத்தின் அளவு: அ + அ -

டெல்லியில் ஆண்டுதோறும் தசரா விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திரு. ராம்நாத் கோவிந்த், பிரதமர் திரு. நரேந்திரமோடி பங்கேற்றனர். லவன்-குஷன் நிகழ்ச்சியும், ராமர் ராவணனை அழிக்கும் நாடகமும் நடத்தப்பட்டது. இதில், பிரதமர் திரு.மோடி, மேடையில் இருந்து ராவண உருவபொம்மையை நோக்கி அம்பெய்ததும், அதன் மீதிருந்த பட்டாசுகள் வெடிக்கச் செய்யப்பட்டு, தீயிட்டுக் கொளுத்தப்பட்டது.

இதேபோல், டெல்லியில் ஸ்ரீநவ் தார்மின் லீலா குழுவினர் நடத்திய ராம்லீலாவில், காங்கிரஸ் தலைவர் திரு. ராகுல் காந்தி, திருமதி சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் திரு. மன்மோகன் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் ராவணன் உருவபொம்மையை நோக்கி ராகுல் காந்தி அம்பெய்து எரித்தார்.

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் நடைபெற்ற ராம்லீலா நிகழ்ச்சியில், ராவண வதம் நடைபெற்றபோது பட்டாசுகள் வெடித்துச் சிதறி தீ விபத்து ஏற்பட்டது. விழா மேடையில் தீ பரவியதால் பொதுமக்‍கள் அச்சமடைந்தனர். சம்பவ இடத்திற்கு 2 தீயணைப்பு வாகனங்கள் விரைந்து சென்று தீயைக்‍ கட்டுக்‍குள் கொண்டு வந்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00