பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் தசரா விழாவின்போது நிகழ்ந்த சோக விபத்தை அரசியலாக்க வேண்டாம் : அம்மாநில காங்கிரஸ் அமைச்சரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத் சிங் சித்துவின் மனைவி வேண்டுகோள்
Oct 20 2018 11:59AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில், தசரா விழாவின் போது நிகழ்ந்த சோக விபத்தை அரசியலாக்க வேண்டாம் என, அம்மாநில காங்கிரஸ் அமைச்சரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத் சிங் சித்துவின் மனைவி நவ்ஜோத் கவுர் சித்து தெரிவித்துள்ளார்.
அமிர்தசரஸ் தசரா விழா காங்கிரஸ் கட்சி சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த விழாவிற்கு சித்துவின் மனைவி நவ்ஜோத் கவுர் சித்து தலைமை வகித்துள்ளார்.
ஆனால் இந்த விபத்து நடைபெற்று மக்கள் கூக்குரலிட்டபோது, மேடையில் இருந்த நவ்ஜோத் கவுர் சித்து சிறப்புரையாற்றி கொண்டிருந்தாகவும், மக்கள் குறித்து கவலைப்படவில்லை என்றும் தகவல்கள் வெளியாகிவுள்ளன.
இத்தகவலை மறுத்துள்ள நவ்ஜோத் கவுர் சித்து, விபத்து நடைபெறுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பே, தான் சம்பவ இடத்திலிருந்து புறப்பட்டு விட்டதாக தெரிவித்துள்ளார். காயப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதே தற்போது முக்கியம் எனக் கூறிய அவர், இந்த நிகழ்வை அரசியலாக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
குருநானக் தேவ் மருத்துவமனைக்கு சென்ற நவ்ஜோத்சிங் சித்து, ரயில் விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். காயமடைந்தவர்களின் நிலைமை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.