கேரள முன்னாள் முதலமைச்சர் உம்மன்சான்டி மீதான சரிதா நாயரின் பாலியல் புகாரால் பரபரப்பு - வழக்கு பதிவு செய்து போலீசார் நடவடிக்கை
Oct 22 2018 12:25PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கேரள முன்னாள் முதலமைச்சர் உம்மன்சாண்டி தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக சூரிய மின் தகடு ஊழலில் தொடர்புடைய சரிதா நாயர் புகார் தெரிவிப்பது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் கடந்த காங்கிரஸ் ஆட்சியின்போது, சரிதா நாயரின் சூரிய மின்தகடு ஊழலில் அப்போதைய காங்கிரஸ் முதலமைச்சர் உம்மன்சாண்டி உள்ளிட்டோரும் குற்றம் சாட்டப்பட்டனர். இது தொடர்பாக கடந்த ஆண்டு விசாரணை குழு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இந்த நிலையில், மின்தகடு ஊழலில் முக்கிய பங்கு வகிக்கும் சரிதா நாயர், தற்போது உம்மன்சாண்டி மீது பாலியல் புகார் தெரிவித்து மற்றொரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். கடந்த 2012-ம் ஆண்டு திருவனந்தபுரத்தில் உள்ள முதலமைச்சருக்கான அதிகாரப்பூர்வ இல்லத்தில் வைத்து உம்மன் சாண்டி தம்மை பாலியல் பலாத்காரம் செய்ததாக திடுக்கிடும் தகவல் வெளியிட்டுள்ளார். இதேபோல், அப்போதைய காங்கிரஸ் அமைச்சர் அனில்குமார், அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கேசி வேணுகோபால் ஆகியோரும், தம்மை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இதனடிப்படையில், அம்மூவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதாக கேரள காவல்துறை தெரிவித்துள்ளார்.