புதுச்சேரியில் பன்றிக் காய்ச்சல் அறிகுறியுடன் 38 பேர் சிகிச்சை : சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் ராமன் அறிவிப்பு
Oct 22 2018 4:50PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதுச்சேரியில் பன்றிக் காய்ச்சல் அறிகுறியுடன் 38 பேர் சிகிச்சை பெற்று வருவதாக அம்மாநில சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் ராமன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி சுகாதாரத்துறை சார்பில், அயோடின் குறைபாடு காரணமாக ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை அம்மாநில சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் ராமன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதுச்சேரியில் பன்றிக் காய்ச்சல் அறிகுறியுடன் 38 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும், இந்த காய்ச்சலுக்கு ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்தார். பன்றிக்காய்ச்சலைக் கட்டுப்படுத்த சுகாதாரத்துறை சார்பில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாவும் டாக்டர் ராமன் தெரிவித்தார்.