உள்நாட்டு சொகுசு கப்பலில் ஆபத்தான முறையில் செல்ஃபி : மகாராஷ்டிரா முதலமைச்சரின் மனைவிக்கு கண்டனம்
Oct 22 2018 4:54PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உள்நாட்டு சொகுசு கப்பலில் ஆபத்தான முறையில் செல்ஃபி எடுத்த மகாராஷ்டிரா முதலமைச்சரின் மனைவிக்கு சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிசின் மனைவி அம்ருதா, உள்நாட்டு சொகுசு கப்பலில் ஆபத்தான முறையில் செல்ஃபி எடுக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
இந்தியாவின் முதல் சொகுசுக் கப்பலான அங்ரியா, நேற்று முதல் மும்பை - கோவா இடையே போக்குவரத்தை தொடங்கியது. இந்தக் கப்பலில் நேற்று பயணித்த, முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிசின் மனைவி அம்ருதா, கப்பலின் பாதுகாப்பு வரம்பை மீறிச் சென்று ஆபத்தான இடத்தில் அமர்ந்து செல்பி எடுத்துக்கொண்டார். பாதுகாப்பிற்காக நின்றிருந்த காவல்துறை அதிகாரிகளின் எச்சரிக்கையையும் மீறி அங்கு சென்ற அவர், பின்னர் செல்ஃபி எடுத்துக் கொண்டார். இதற்கு பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.