சபரிமலையில் பெண்கள் அனைவரையும் அனுமதித்த தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனு - நவம்பர் 13-ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணை
Oct 23 2018 3:34PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சபரிமலை விவகாரம் தொடர்பான சீராய்வு மனுக்களை அடுத்தமாதம் 13-ம் தேதி விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் கோவிலுக்குள் தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்புக்கு எதிராக இந்து அமைப்புகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருவதோடு, கோவிலுக்கு செல்ல முயன்ற பெண்களை தடுத்து நிறுத்தின. சபரிமலை தொடர்பான தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி பல்வேறு தரப்பினர் மனு தாக்கல் செய்துள்ளனர். சீராய்வு மனுக்களை அவசர வழக்காக விசாரிக்கக்கோரி வழக்கறிஞர் மேத்யூஸ் ஜே நெடும்பரா என்பவர் தாக்கல் செய்த மனுவை, தலைமை நீதிபதி திரு. ரஞ்சன் கோகாய், நீதிபதி திரு. எஸ்.கே.கவுல் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று விசாரித்தது. அதைத்தொடர்ந்து இன்று நடைபெற்ற விசாரணையில், சபரிமலை விவகாரம் தொடர்பாக இதுவரை தாக்கல் செய்த 19 மறு சீராய்வு மனுக்களையும் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாகவும், இந்த மனுக்கள் மீது அடுத்த மாதம் 13-ம் தேதி விசாரணை நடைபெறும் எனவும் அறிவித்துள்ளது.