சபரிமலையை யுத்தகளமாக்கியது ஆர்.எஸ்.எஸ். அமைப்பு - கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு - உச்சநீதிமன்றத் தீர்ப்பு செயல்படுத்தப்படும் என்றும் உறுதி
Oct 23 2018 3:38PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சபரிமலை வழிபாடு விவகாரத்தில் பெண்களை அனுமதிக்காமல் யுத்தகளமாக்கியது ஆர்.எஸ்.எஸ். அமைப்புதான் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் குற்றம் சாட்டியுள்ளார்.
சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் கோவிலுக்குள் தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு நிறைவேற்றப்படும் என அம்மாநில முதலமைச்சர் திரு.பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், சபரிமலையை யுத்தகளமாக்கியது ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தான் என குற்றம்சாட்டினார். கோயிலுக்கு வந்த பெண் பக்தர்கள், செய்தியாளர்கள் மீது அந்த அமைப்பினர் தாக்குதல் நடத்தியது கண்டிக்கத்தக்கது என்றும், இதற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டார்.
மேலும், கேரள வரலாற்றில் இல்லாத அளவுக்கு பெண் பக்தர்கள் மற்றும் செய்தியாளர்கள் மிரட்டப்பட்டார்கள் என்றும், சபரிமலைக்கு வந்த பெண் பக்தர்களை போலீசோ, அரசோ தடுக்கவில்லை என்றும் தெரிவித்தார்.