ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு நிலவரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆய்வு
Oct 23 2018 1:29PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு நிலவரம் மற்றும் முக்கிய நடவடிக்கைகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஒருநாள் பயணமாக இன்று ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சென்றடைந்தார். அங்கு பாதுகாப்பு சூழலை அவர் ஆய்வு செய்து வருகிறார். இந்தியா - பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் அவர் ஆய்வு செய்யவிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். ஜம்மு-காஷ்மீரில் தற்போது ஆளுநர் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், ஆளுநர் சத்யபால் மாலிக்கை சந்தித்து ஆட்சி நிர்வாக நிலை குறித்தும், காவல்துறை மற்றும் பாதுகாப்பு படையினரின் செயல்பாடுகள் குறித்தும் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தினார். இதுதவிர சில அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளையும் அவர் சந்திக்கிறார்.