ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதில் ஊழல் நடைபெற்றதாக எழுந்த குற்றச்சாட்டு - விமானத்தின் விலை விவரங்களை உச்சநீதிமன்றத்தில் வழங்கியது மத்திய அரசு
Nov 13 2018 12:04PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ரஃபேல் விமான விலை விவரங்களை மத்திய அரசு உச்சநீதிமன்றத்திடம் வழங்கியுள்ளது.
பிரான்ஸ் நாட்டிடம் இருந்து, ரஃபேல் ரக போர் விமானங்களை வாங்கியதில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. அந்நாட்டின் Dassault நிறுவனத்திடமிருந்து 36 விமானங்களை வாங்கியதில், மத்தியில் ஆளும் பாஜக அரசு மிகப்பெரும் ஊழலில் ஈடுபட்டதால், விமானத்தின் விலை குறித்த விவரங்களை வெளியிடவேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. ஆனால், நாட்டின் பாதுகாப்புத் துறை சம்மந்தப்பட்டது என்பதால் விலை விவரங்களை வெளியிட முடியாது என மத்திய அரசு தெரிவித்தது. எனினும் இது தொடர்பான வழக்கில் ரஃபேல் விமான விலை விவரங்களை தெரிவிக்குமாறு உச்சநீதி மன்றம் உத்தரவிட்டது. இதன் அடிப்படையில் ரஃபேல் விமான விலை விவரத்தை மத்திய அரசு உச்சநீதிமன்றத்திடம் வழங்கியுள்ளது. வழக்கமான பதிவுத் தபால் மூலம் அல்லாமல், பாதுகாப்புத் துறை அமைச்சகத்திடமிருந்து நேரடியாக உச்சநீதிமன்ற செயலாளருக்கு, விமான விலை தொடர்பான சீலிடப்பட்ட உறை வழங்கப்பட்டது.