ரஃபேல் போர் விமான விவகாரத்தில், ரிலையன்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்ய, யாரும் நிர்ப்பந்திக்‍கவில்லை - பிரான்சின் டசால்ட் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி விளக்‍கம்

Nov 13 2018 5:56PM
எழுத்தின் அளவு: அ + அ -

ரஃபேல் போர் விமான விவகாரத்தில், ரிலையன்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ள, டசால்ட் நிறுவனத்தை யாரும் நிர்பந்திக்‍கவில்லை என அந்நிறுவன தலைமைச் செயல் அதிகாரி எரிக் டிராப்பியர் தெரிவித்துள்ளார்.

ரஃபேல் விமான பேரத்தில் ஊழல் நடைபெற்றுள்ளதாகவும், பிரதமர் திரு. நரேந்திர மோடியின் நிர்பந்தத்தின் பேரிலேயே, விமானங்களை தயாரிக்‍கும் டசால்ட் நிறுவனம், ரிலையன்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டதாகவும், காங்கிரஸ் தலைவர் திரு. ராகுல் காந்தி குற்றம்சாட்டி வருகிறார். ராகுலின் குற்றச்சாட்டை, டசால்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எரிக் டிராப்பியர் மறுத்துள்ளார். தனியார் தொலைக்‍காட்சி ஒன்றுக்‍கு அவர் அளித்த பேட்டியில், ரஃபேல் ஒப்பந்தத்திற்கு, அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தை தாங்களேதான் தேர்வு செய்தோம் என்று கூறினார். தங்களை யாரும் நிர்பந்திக்‍கவில்லை என்று தெரிவித்த அவர், ரிலையன்ஸ் நிறுவனத்தில் டசால்ட் நிறுவனம் முதலீடு எதுவும் செய்யவில்லை என்றும் குறிப்பிட்டார். ரஃபேல் போர் விமானத்தை, அதிக விலைக்‍கு விற்கவில்லை என்றும், இவ்விஷயத்தில், தான் பொய் கூறவில்லை என்றும் எரிக் டிராப்பியர் தெரிவித்தார்.

இதனிடையே, ரஃபேல் விவகாரத்தில் டசால்ட் நிறுவனத்தை கொண்டே, திட்டமிட்ட பொய்யை மத்திய பா.ஜ.க. அரசு பரப்பி வருவதாக, காங்கிரஸ் தலைவர் திரு. ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00