ரஃபேல் போர் விமான ஒப்பந்த முறைகேடு தொடர்பான வழக்கு - விமானப்படை அதிகாரி நேரில் ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவு
Nov 14 2018 1:29PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ரஃபேல் போர் விமானம் ஒப்பந்த முறைகேடு தொடர்பான வழக்கில், விமானப்படை அதிகாரி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிரான்ஸைச் சேர்ந்த டசால்ட் நிறுவனத்திடமிருந்து 36 ரஃபேல் ரக போர் விமானங்களை வாங்க இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. ஆனால், இதில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரியும், நீதிமன்றத்தின் கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தக் கோரியும் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த வழக்கு தொடர்பாக மத்திய அரசு ஏற்கெனவே பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது. இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் விசாரைணக்கு வந்தபோது, வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு, விமானப்படை அதிகாரி நேரில் ஆஜராக உத்தரவிட்டது.