டிசம்பர் 11-ம் தேதி கூடுகிறது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் - ஜனவரி 8ம் தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்
Nov 15 2018 11:25AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரை டிசம்பர் 11-ம் தேதி முதல் ஜனவரி 8ம் தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவைக்குழு கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் திரு.விஜய் கோயல், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் அட்டவணை குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிவித்தார். அதன்படி, அடுத்த மாதம் 11-ம் தேதி முதல், ஜனவரி 8-ம் தேதி வரை கூட்டத்தொடரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.