சிசிடிவி கேமரா மூலம் வீடு கண்காணிப்பு : முதலமைச்சர் நிதிஷ் குமார் மீது லாலு மகன் தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு
Nov 16 2018 5:02PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சக்தி வாய்ந்த சிசிடிவி கேமரா மூலம், தனது வீட்டை, பீகார் முதலமைச்சர் திரு. நிதிஷ் குமார் கண்காணிப்பதாக, அம்மாநில எதிர்க்கட்சி தலைவர் திரு. தேஜஸ்வி யாதவ் குற்றம் சாட்டியுள்ளார்.
பீகார் முதலமைச்சர் திரு. நிதிஷ் குமாரின் அரசு இல்லம் தலைநகர் பாட்னாவில் உள்ள சர்க்குலர் சாலையில் அமைந்துள்ளது. இவரது வீட்டுக்கு பின்னால், திரு. லாலு பிரசாத் யாதவின் மகனும், பீகார் எதிர்க்கட்சி தலைவருமான திரு. தேஜஸ்வி யாதவ் வீடு உள்ளது. திரு. நிதிஷ் குமார் வீட்டின் சுற்றுச்சுவர்களில் புதிய சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திரு. தேஜஸ்வி யாதவ், டிவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், முதல்வர் வீட்டுக்கு பின்புறம் உள்ள தனது இல்லத்தை நோக்கி, தன்னை கண்காணிப்பதற்காகவே சக்தி வாய்ந்த சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.