மக்களவைத் தேர்தலை கருத்தில் கொண்டு சபரிமலை விவகாரத்தில் பா.ஜ.க. பாணியை காங்கிரஸ் கடைபிடிக்கிறது - கேரள அமைச்சர் சட்டப்பேரவையில் பகிரங்க குற்றச்சாட்டு
Dec 6 2018 4:23PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரத்தில், மக்களவை தேர்தலை கருத்தில்கொண்டே, பாரதிய ஜனதாவின் பாணியை காங்கிரசும் பின்பற்றுவதாக கேரள அரசு விமர்சித்துள்ளது.
சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ள நிலையில் இப்பிரச்னை, கேரள சட்டமன்றத்திலும் எதிரொலித்து வருகிறது. நாடாளுமன்ற தேர்தலைக் கருத்தில்கொண்டு, காங்கிரசும், அதே பாணியை பின்பற்றுவதாக, கேரள தேவசம் அமைச்சர் திரு. கடகம்பள்ளி சுரேந்திரன், சட்டப்பேரவையில் இன்று குற்றம்சாட்டியுள்ளார்.
சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரத்தில் கேரள அரசு பிடிவாதமாக இல்லை என்றும், அதே நேரம், உச்சநீதிமன்ற தீர்ப்பு அமல்படுத்தப்படும் என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.