மேகதாது அணை விவகாரத்தில் தமிழகத்தின் எதிர்ப்பை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம் என கர்நாடக அமைச்சர் பேட்டி - மின்சாரம் தயாரிக்கவே அணை கட்ட முடிவு செய்துள்ளதாக தகவல்
Dec 6 2018 6:04PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மேகதாது அணை விவகாரத்தில் தமிழகத்தின் எதிர்ப்பை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம் என்றும், மின்சாரம் தயாரிக்கவே அணை கட்ட முடிவு செய்துள்ளதாகவும், கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.
மேகதாது பிரச்சனையை நட்புரீதியாக பேசி தீர்க்கலாம் என தமிழக அரசுக்கு கர்நாடக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் திரு. சிவக்குமார் கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து பேட்டியளித்த அவர், காவிரியின் குறுக்கே அணைகட்ட தமிழகத்துக்கு வாய்ப்பில்லை என்றும், கர்நாடகாவுக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார். 400 மெகா வாட் மின்சாரம் தயாரிக்கவே மேகதாது அணையை கட்டுவதாகவும், பாசான வசதிக்கு பயன்படுத்த மாட்டோம் என்றும் அவர் கூறினார். மேகதாது திட்ட அறிக்கைக்கு தமிழக அரசு, தடை ஆணை பெற விடமாட்டோம் என்று தெரிவித்த திரு. சிவக்குமார், நடப்பாண்டில் திறந்துவிடப்பட்ட தண்ணீரை, தமிழக அரசு முழுமையாக பயன்படுத்தப்படவில்லை எனவும் குற்றம் சாட்டினார்.