உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை விமர்சித்த சித்துவின் தலைக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு - இந்து அமைப்பின் சர்ச்சைக்குரிய அறிவிப்பால் பரபரப்பு
Dec 7 2018 5:55PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
யோகி ஆதித்யநாத்தை விமர்சனம் செய்த பஞ்சாப் அமைச்சர் சித்துவின் தலைக்கு, ஒரு கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என இந்து அமைப்பு அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் கிரிக்கெட் வீரரும், பஞ்சாப் மாநில அமைச்சருமான சித்து, தெலுங்கானா, ராஜஸ்தான் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்காக பிரச்சாரம் மேற்கொண்டார்.
பிரதமர் மோடி மற்றும் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை கடுமையாக விமர்சித்தார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள இந்து யுவவாகினி அமைப்பு, சித்துவின் தலைக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக பேசிய அந்த அமைப்பின் தலைவர் தருண்சிங், 'யோகி ஆதித்யநாத்தை விமர்சித்த பஞ்சாப் அமைச்சர் சித்துவின் தலையை துண்டித்து கொண்டு வருவோருக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று தெரிவித்தார். சித்து பாகிஸ்தானை புகழ்வதாகவும், சொந்த நாட்டுக்கு எதிராக பேசுவதாகவும் விமர்சித்தார்.