ராஜஸ்தான், தெலங்கானா மாநிலங்களில், சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரேகட்டமாக இன்று நடைபெறுகிறது - தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிட தடை
Dec 7 2018 12:29PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுவதால், மாலை 5.30 மணி வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் இன்று நடைபெறுகிறது. இதன்காரணமாக, இன்று மாலை 5.30 மணி வரை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
மின்னணு அல்லது அச்சு ஊடகங்கள் வாயிலாக எந்தவிதமான கருத்துக்கணிப்பும் வெளியிடக்கூடாது என தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேபோல், கருத்துக்கணிப்பு தொடர்பாகவும், அல்லது வேறு எந்த வகையிலும் நடைபெறும் தேர்தல் தொடர்பான போராட்டங்களுக்கும் தடை விதிக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.