ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரிக்கலாம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
Dec 7 2018 1:19PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரிக்க தடையில்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கடந்த மே மாதம் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் நடத்திய போராட்டத்தின்போது போலீசார் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் அப்பாவி பொதுமக்கள் 13 பேர் கொல்லப்பட்டனர். இதுகுறித்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்கக்கோரி பல்வேறு வழக்குகள் தொடுக்கப்பட்டன. இதையடுத்து இந்த சம்பவத்தை சி.பி.ஐ. விசாரிக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு சம்பவத்தை சி.பி.ஐ. விசாரிக்கலாம் என்றும், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை உறுதி செய்தும் நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.