இந்தியாவில் 5ஜி சேவை வசதி வரும் 2022-ம் ஆண்டில்தான் கிடைக்கும் : தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் தகவல்
Dec 7 2018 1:35PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தியாவில் 5ஜி சேவை வசதி, வரும் 2022-ம் ஆண்டில்தான் கிடைக்கும் என தொலை தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் தெரிவித்துள்ளது.
டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தொலை தொடர்பு ஒழுங்கு முறை ஆணையமான டிராயின் செயலாளர் திரு. குப்தா, நாளுக்கு நாளுக்கு செல்ஃபோன் சேவை வளர்ந்து வருவதை சுட்டிக் காட்டினார். இதற்கு ஈடு கொடுக்கும் வகையில், தொழில்நுட்ப வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருவதாகவும், தற்போது, 40 கோடி மக்கள், தரமான இணையதள சேவையை பயன்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார். வரும் 2022ம் ஆண்டில்தான், நாட்டில் 5ஜி சேவை நடைமுறைக்கு வரும் என்று கூறிய அவர், இதன் மூலம் டேட்டா மற்றும் இணையதள வசதிகள் பெரிதும் மேம்படும் என தெரிவித்தார்.