காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் இடத்தில் கர்நாடக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் ஆய்வு
Dec 7 2018 6:11PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் இடத்தில் கர்நாடக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் திரு. சிவகுமார் ஆய்வு நடத்தினார்.
மேகதாதுவில் அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்க மத்திய நீர்வளத்துறை ஆணையம், கர்நாடக அரசுக்கு அனுமதி அளித்தது. இதற்கு கண்டனம் தெரிவித்து தமிழக சட்டப்பேரவையில் நேற்று மாலை ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், இரவு 8 மணியளவில், பெங்களூருவில் கர்நாடக முதலமைச்சர் திரு. குமாராசாமி தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில் அணை கட்டுவது தொடர்பான பணிகளை தொடர முடிவெடுக்கப்பட்டது. இதையடுத்து, அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கையை தயார் செய்வது தொடர்பாக, அம்மாநில நீர்ப்பாசனத்துறை அமைச்சர் திரு. சிவகுமார், இன்று மேகதாதுவில் ஆய்வு மேற்கொண்டார். அவருடன், பொதுப்பணித்துறை மற்றும் வனத்துறை வல்லுநர்களும் உடன் சென்றனர்.