இந்திய பொருளாதாரம் மந்த நிலையை எதிர்கொள்ள நேரிடும் - முன்னாள் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன் எச்சரிக்கை
Dec 10 2018 12:24PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்திய பொருளாதாரம் மந்த நிலையை எதிர்கொள்ள நேரிடும் என முன்னாள் பொருளாதார ஆலோசகர் திரு. அரவிந்த் சுப்பிரமணியன் எச்சரித்துள்ளார்.
தமது புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய திரு. அரவிந்த் சுப்பிரமணியன், பணமதிப்பிழப்பு நடவடிக்கையும், ஜி.எஸ்.டி. அமல்படுத்தப்படுத்தப்பட்ட விதமும், அதற்கு சொல்லப்பட்ட காரணங்களும் ஒன்றுக்கொன்று தொடர்பு இல்லாதவை என கூறியுள்ளார். நிதி நிர்வாக முறையும், வேளாண்துறையும் கடுமையான நெருக்கடியில் இருப்பதாகவும், இதனை சரி செய்ய நிதித்துறை விதிமுறைகள் கடுமையாக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். நிதி நிலைமைகள் இருக்கமானதாக இருப்பது, நாட்டின் நீடித்த விரைவான வளர்ச்சிக்கு உகந்தது அல்ல என்று குறிப்பிட்டுள்ள அவர், ரிசர்வ் வங்கியின் தன்னாட்சி அதிகாரத்தை பாதுகாப்பது அவசியம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.