அயோத்தியில் ராமர் கோயிலைக் கட்ட வலியுறுத்தல் - டெல்லியில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் ஒன்றரை லட்சம் பேர் திரண்ட பிரம்மாண்ட பேரணி
Dec 10 2018 4:42PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அயோத்தியில் ராமர் கோயிலைக் கட்ட வலியுறுத்தி, விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் டெல்லியில் நடத்திய பிரமாண்ட பேரணியில், ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.
அயோத்தியில் ராமர் பிறந்த இடமாக கருதப்படும் இடத்தில் கோவில் கட்டுமாறு இந்து அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. டெல்லியில், 'தர்ம சபா' என்ற பெயரில் பிரமாண்ட கூட்டத்தை, விஸ்வ இந்து பரிஷத் நடத்தியது. வரும் குளிர்கால நாடாளுமன்றக் கூட்டத்தொடரில், ராமர் கோயில் கட்டுவது குறித்து சட்டமசோதா நிறைவேற்ற வலியுறுத்தி, டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் பிரம்மாண்டமான கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு, 'பாக்யா யாத்திரை' என்ற பெயரில் லட்சுமி நகரில் இருந்து பேரணியாக சென்றனர். இந்தப் பேரணியில், விஸ்வ இந்து பரிஷத், சாதுக்கள், ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் என ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமானோர் கலந்துகொண்டு பிரமாண்ட பேரணி நடத்தினர்.