ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தொடரப்பட்ட வழக்கு - விசாரணை முடிவடைந்த நிலையில் ஒரு வாரத்திற்கு தீர்ப்பு ஒத்திவைப்பு
Dec 10 2018 5:52PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆலை நிர்வாகம் சார்பாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு அடுத்த வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.
தூத்துக்குடியில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலை, மக்களின் தன்னெழுச்சி போராட்டத்தினால், கடந்த மே மாதம் இழுத்து மூடப்பட்டது. இதனை எதிர்த்து, ஆலை நிர்வாகம் சார்பாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த ஆணையம், மேகாலயா உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி திரு. தருண் அகர்வால் தலைமையில் குழு ஒன்றை அமைத்தது. அக்குழு, ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக ஆய்வு நடத்தி, நீர், காற்று மாசு உள்ளிடவை குறித்த ஆய்வறிக்கையை பசுமை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்தது. வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், தீர்ப்பு ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.