பா.ஜ.க. நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட மக்கள் கொடுத்த தீர்ப்புதான் தேர்தல் முடிவுகள் - மம்தா பானர்ஜி கருத்து
Dec 11 2018 3:17PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
5 மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஜனநாயகத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என மேற்குவங்க முதல்வரும், திரிணாமூல் காங்கிரஸ் தலைவருமான செல்வி மம்தா பானர்ஜி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
5 மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் பற்றி டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் என்ற இறுதிப்போட்டிக்கு இது உண்மையான முன்னோட்டம் என கூறியுள்ளார்.
ஜனநாயகத்தில் எப்போதுமே மக்கள்தான் கதாநாயகர்களாக திகழ்கின்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய அரசின் அடக்குமுறைகளால் பாதிக்கப்பட்ட மக்கள் பா.ஜ.க.வுக்கு கொடுத்த தண்டனையே இந்தத் தீர்ப்பு என்றும் செல்வி மம்தா பானர்ஜி டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.