பாரதிய ஜனதா கட்சியின் தோல்விக்கு மத்திய அரசின் செயல்பாடுகள் காரணமல்ல - உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் விளக்கம்
Dec 12 2018 3:57PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
5 மாநில தேர்தல் முடிவுகளுக்கு, மத்திய அரசின் செயல்பாடுகள் காரணமல்ல என மத்திய உள்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.
5 மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகளால் மத்தியில் ஆளும் பா.ஜ.க.வின் செல்வாக்கு சரிந்துவிட்டதாக பல்வேறு தரப்பிலும் கூறப்படுகிறது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள திரு. ராஜ்நாத்சிங், இந்த தேர்தல் முடிவுகளுக்கு மத்திய அரசின் செயல்பாடுகள் காரணமல்ல எனக் கூறினார். மாநில அரசுகளின் செயல்பாடுகள் அடிப்படையில் மட்டுமே, சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெற்றதால், அந்தந்த மாநில பிரச்னையாக மட்டுமே அதனை பார்க்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். தெலங்கானாவில், காங்கிரஸ் தலைமையிலான மெகா கூட்டணி தோல்வியடைந்திருப்பதாகவும் குறிப்பிட்ட அவர், வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவிப்பதாகவும் கூறினார்.