மாநிலங்களவையில் முத்தலாக் மசோதா முடங்கிய விவகாரம்: அவசர சட்டத்தை மீண்டும் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்
Jan 11 2019 11:41AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாடாளுமன்ற மாநிலங்களவையில் முத்தலாக் மசோதா முடங்கியதால் அவசர சட்டத்தை மீண்டும் அமலுக்கு கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முத்தலாக் நடைமுறை சட்டவிரோதம் என கடந்த 2017ம் ஆண்டு தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தியது. இதைத்தொடர்ந்து மக்களவையில் கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் மாதம் 27ம் தேதி மசோதா நிறைவேற்றப்பட்டது. மாநிலங்களவையில் நிறைவேற்ற முடியாததால் முத்தலாக் நடைமுறையை தடை செய்து மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது.
இந்நிலையில், முத்தலாக் தடையை மீறி ஒருவர் செயல்பட்டால் அவருக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கும் மசோதா, மக்களவையில் கடந்த டிசம்பர் 27ம் தேதி நிறைவேற்றப்பட்டது. எனினும், மாநிலங்களவையில் இந்த மசோதா மீண்டும் முடங்கியது.
இந்நிலையில், முத்தலாக் கிரிமினல் குற்றம் என்பதை உறுதிசெய்யும் வகையிலான அவசர சட்டத்தை மீண்டும் அமலுக்கு கொண்டு வருவது தொடர்பான பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவை இசைவு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.