அடுத்த 2 ஆண்டுகளில், 2 ஆளில்லா விண்கலங்களை விண்வெளிக்கு அனுப்புவதே இலக்கு - இஸ்ரோ தலைவர் சிவன் பேட்டி
Jan 11 2019 3:27PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அடுத்த இரண்டு ஆண்டுகளில் 2 ஆளில்லா விண்கலங்கள் விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தலைவர் திரு. சிவன் தெரிவித்துள்ளார்.
பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய திரு. சிவன், கடந்த ஆண்டு, 17 விண்வெளி திட்டங்கள் நிறைவேற்றப்பட்டதாகவும், அதில், 2 ஜிஎஸ்எல்வி ராக்கெட்டுகள் விண்ணில் ஏவுப்பட்டது குறிப்பிடத்தக்கது என்றும் தெரிவித்தார். நிலவுக்கு மனிதனை அனுப்பும் ககன்யான் திட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும், இது இஸ்ரோவின் மிகப் பெரிய திருப்பு முனை திட்டம் என்றும் குறிப்பிட்டார்.
2020-ம் ஆண்டு டிசம்பரில் ஒரு ஆளில்லா விண்கலமும், 2021-ம் ஆண்டு ஜூலையில் ஒரு ஆளில்லா விண்கலமும் விண்ணில் செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும், 2021-ம் ஆண்டு டிசம்பரில் ஆட்களை சுமந்து செல்லும் விண்கலத்தை விண்ணிற்கு அனுப்பவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக திரு. சிவன் கூறினார்.