தேசிய அளவில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணிக்கு வாய்ப்பு இல்லை - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி தகவல்
Jan 16 2019 5:37PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தேசிய அளவில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கூட்டணி அமைய வாய்ப்பு இல்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் திரு. சீதாராம் யெச்சூரி கூறியுள்ளார்.
கொல்கத்தாவில் செய்தியாளர்களை சந்தித்த திரு. சீதாராம் யெச்சூரியிடம், வரும் நாடாளுமன்ற தேர்தலில், பா.ஜ.க.வை வீழ்த்த, காங்கிரசுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, கூட்டணி அமைக்குமா என கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்த திரு. யெச்சூரி, அரசியல் சூழ்நிலை, மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடும் என்றும், எனவே காங்கிரஸ் கட்சியுடனான பேச்சுவார்த்தை முதலில் மாநில அளவில் தொடங்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும், காங்கிரஸ்-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இடையே தேசிய அளவிலான கூட்டணி அமைய தற்போது வாய்ப்பில்லை என்றும் அவர் கூறினார்.