ஜிஎஸ்டி அமல் மற்றும் வரி சீர்திருத்தம் செய்ததால் செலவு குறைக்கப்பட்டுள்ளது - பிரதமர் மோடி பெருமிதம்
Jan 18 2019 6:06PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாட்டில், முன் எப்போதும் இல்லாத அளவிற்கு, தொழில் தொடங்கும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாக பிரதமர் திரு. மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலத்தில், Vibrant Gujarat என்ற பெயரில், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் வகையில் நடைபெற்ற மாநாட்டில், பிரதமர் திரு. மோடி இன்று பங்கேற்று உரையாற்றினார்.
உலக வங்கியின் அட்டவணைப்படி, எளிதாக வர்த்தகம் செய்ய உகந்த நாடுகளின் பட்டியலில், இந்தியா 77-வது இடத்தை பிடித்துள்ளதாக தெரிவித்த அவர், அடுத்த ஆண்டுக்குள், முதல் 50 இடங்களுக்குள் வரும் வகையில், பணியாற்ற வேண்டுமென அமைச்சர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறினார்.
நாட்டில் தொழில் தொடங்குவதை எளிமையாக்கி உள்ளோம் என்றும், ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டு, வரிகள் சீர்செய்யப்பட்டு, செலவுகள் குறைக்கப்பட்டுள்ளதாகவும், பிரதமர் மோடி தெரிவித்தார்.