ரஃபேல் ஒப்பந்தத்தில் அனில் அம்பானிக்காக மட்டுமே திருத்தங்கள் - காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டு
Feb 13 2019 5:30PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அனில் அம்பானிக்காக மட்டுமே ரஃபேல் ஒப்பந்தத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதாக காங்கிரஸ் தலைவர் திரு. ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
ரஃபேல் விமான பேரம் தொடர்பாக மாநிலங்களவையில் இன்று மத்திய கணக்கு தணிக்கை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இது குறித்து, டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் செய்தியாளர்களை சந்தித்த திரு. ராகுல் காந்தி, ரஃபேல் விவகாரத்தில் மத்திய அரசு கூறிய அனைத்தும் பொய் என்பது நிரூபணம் ஆகியுள்ளதாக தெரிவித்தார். அனில் அம்பானிக்காக மட்டுமே இந்த ஒப்பந்தத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார். ரஃபேல் ஒப்பந்தத்துக்கு எதிரான பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகளின் கடிதங்களையும் வெளியிட்டார். முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு காலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில், 126 விமானங்களுக்கு ஆன விலை, தற்போதைய பா.ஜ.க. அரசு மேற்கொண்டுள்ள ரஃபேல் ஒப்பந்தத்தின்படி 36 விமானங்களுக்கு ஆகியுள்ளதாகவும் ராகுல் கூறினார்.