விதிமீறலில் ஈடுபட்ட கிரண்பேடியை கண்டித்து நாராயணசாமி தர்ணா - ஆளுநர் மாளிகை முன்பு திரண்ட காங்கிரஸ் தொண்டர்கள்

Feb 13 2019 5:58PM
எழுத்தின் அளவு: அ + அ -

புதுச்சேரியில், துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை கண்டித்து முதலமைச்சர் திரு.நாராயணசாமி தலைமையில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆளுநர் மாளிகை முன்பு தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர்.

புதுச்சேரியில் ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்‍க வேண்டுமென, துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவின்பேரில், விதிமீறலில் ஈடுபட்ட 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீது வழக்‍குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஆளுங்கட்சி தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் திரு. நாராயணசாமி தலைமையில் அமைச்சர்களின் அவசர ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. 2 மணி நேரம் நடைபெற்ற இந்த கூட்டத்தை தொடர்ந்து முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் கருப்பு சட்டை அணிந்தும், சட்டமன்ற உறுப்பினர்கள் கருப்பு துண்டு அணிந்தும் வெளியே வந்தனர்.

சட்டமன்றத்திலிருந்து ஆளுநர் மாளிகை நோக்கி இவர்கள் ஊர்வலமாக வந்தனர். அங்கு ஆளுநர் மாளிகை எதிரில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த காங்கிரஸ் தொண்டர்கள் பெருமளவில் ஆளுநர் மாளிகை முன்பு திரண்டனர். அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.

போராட்டத்தின்போது செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் திரு.நாராயணசாமி, புதுச்சேரி வளர்ச்சிக்கு பிரதமர் மோடி தடையாக உள்ளதாகவும், அவரது ஏஜெண்டாக கிரண்பேடி செயல்படுவதாக குற்றம் சாட்டினார்.

இந்த போராட்டத்தின் காரணமாக ஆளுநர் மாளிகை பகுதியில் போலீஸார் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00