பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வரும் 18ம் தேதி முதல் 3 நாட்கள் பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம் அறிவிப்பு - தொலைத்தொடர்பு சேவை பாதிக்கப்படும் அபாயம்
Feb 14 2019 12:07PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
4ஜி அலைக்கற்றை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து வரும் 18ம் தேதி முதல் 3 நாட்கள் பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
மத்திய அரசின் தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல் நிறுவனத்துக்கு 4ஜி அலைக்கற்றை வழங்க வேண்டும், ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு மாற்றத்தினை அமல்படுத்த வேண்டும், என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் 3 நாள் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். வரும் 18-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை இந்த போராட்டம் அகில இந்திய அளவில் நடைபெற உள்ளது. இதனால் தொலைத்தொடர்பு சேவை கடுமையாக பாதிக்கப்படும் நிலை உருவாகும் என தெரிகிறது.
மத்திய அரசின் போக்கை கண்டித்து கன்னியாகுமரி மாவட்டத்தில் வரும் 18, 19, 20-ம் தேதிகளில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.