ஜம்மு காஷ்மீரில் ரிசர்வ் படை போலீசாரின் வாகனத்தை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் - 12 வீரர்கள் வீரமரணம்
Feb 14 2019 6:20PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ரிசர்வ் படை போலீசாரின் வாகனத்தை குறிவைத்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 12 வீரர்கள்வீர மரணமடைந்தனர்.
காஷ்மீர் மாநிலம் புல்வாமாவின் அவந்திபொராவில் உள்ள கோரிபொரா பகுதியில் சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் சென்ற வாகனம் மீது துப்பாக்கிச்சூடு மற்றும் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. ஸ்ரீநகரில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் நிகழ்த்தப்பட்ட இந்த தாக்குதலில் 12 வீரர்கள் வீரமரணமடைந்துள்ளனர். தாக்குதல் குறித்து தகவலறிற்து சம்பவ இடத்திற்கு விரைந்த பாதுகாப்பு படையினர் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். சம்பவ பகுதியை சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் மிகப்பெரிய தீவிரவாத தாக்குதல் இது என்று கூறப்படுகிறது.