புதுச்சேரி அரசியல் பிரச்னைக்கு தீர்வு காணும் எண்ணம் துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு இல்லை - தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வரும் முதலமைச்சர் நாராயணசாமி பகிரங்க குற்றச்சாட்டு
Feb 18 2019 5:55PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டெல்லியிலிருந்து துணைநிலை ஆளுநர் திருமதி கிரண்பேடி முன்கூட்டியே புதுச்சேரி திரும்பியுள்ளதே, 75 சதவீத வெற்றி என முதலமைச்சர் திரு. நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் துணை ஆளுநர் திருமதி கிரண்பேடிக்கு எதிராக தொடர்ந்து முதலமைச்சர் திரு. நாராயணசாமி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். டெல்லியில் இருந்து நேற்று புதுச்சேரி வந்த திருமதி கிரண்பேடி, முதலமைச்சர் நாராயணசாமியுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தெரிவித்தார். இதற்கு சம்மதம் தெரிவித்த திரு.நாராயணசாமி, இந்த சந்திப்பு தலைமைச் செயலகத்தில் நடைபெறவேண்டும் என்றும், குறிப்பிட்ட துறை செயலர்கள், தலைமைச் செயலர், டிஜிபி ஆகியோரும் உடனிருக்க வேண்டும் என நிபந்தனைகளை வைத்தார். இதனை ஏற்றுகொள்ளாத ஆளுநர், நிபந்தனைகளை ஏற்கமுடியாது என முதலமைச்சருக்கு கடிதம் மூலம் தெரிவித்தார்.
இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் திரு. நாராயணசாமி, பிரச்னைக்கு தீர்வுகாண விரும்பவில்லை என்பது ஆளுநரிடம் இருந்த வந்த கடிதத்தின் மூலம் தெரிகிறது என குற்றம்சாட்டினார்.